மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது மூலம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு நனவாக போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக் கொள்வதற்காக மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, பெருங்குடியில் மதுரை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மேடையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச் சென்ற நற்பணிகளை தற்போதைய அரசு செய்து வருவதாகவும், இதனை பொறுக்க முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் புலம்பி வருவதாகவும் தெரிவித்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு நனவாக உள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், சாமானியமக்கள் உயர் தர மருத்துவ சிகிச்சையை பெற முடியும் எனவும் கூறினார். மக்களவை தேர்தலோடு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரவுள்ளதால், அதிமுகவின் எக்கு கோட்டை திருப்பரங்குன்றம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
Discussion about this post