கடந்த 5 தலைமுறைகளாக ஏழ்மையை காங்கிரஸ் ஒழிக்கவில்லை

கடந்த 5 தலைமுறைகளாக ஏழ்மையை ஒழிப்பதாக கூறி ஆட்சி செய்த காங்கிரஸ் அதைச் செய்யவில்லை என பாஜக தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர், பாலமு மக்களவைத் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த 5 தலைமுறைகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஏழ்மையை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தபோதும் அதனை அவர்கள் செய்யவில்லை என்றார். ஆனால் பாஜக தலைமையிலான நரேந்திரமோடியின் அரசு மின்சாரம், கழிவறை, சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏழைகளுக்கு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் அயராது நாட்டுமக்களுக்காக உழைப்பவர் நரேந்திர மோடி என்று கூறி அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார்.

Exit mobile version