பல்வேறு இசைக்கலைஞர்களின் இசைநிகழ்ச்சிகள் -ஏராளமான ரசிகர்கள் கண்டுகளிப்பு

இளைஞர்களிடம் கர்நாடக சங்கீதத்தை கொண்டு சேர்க்கும் வகையில், சென்னை ராகசுதா அரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சென்னை ராகசுதா அரங்கில் ஏழு நாட்களாக இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கர்நாடக இசையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் கலாரசன சபா சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நாள்தோறும்          200-க்கும் மேற்பட்ட இசை ரசிகர்கள் கண்டு களித்தனர்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் தங்கள் சங்கீதத்தால் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். இசைக் கலைஞர்களான ஆர்த்தி அர்ச்சனா, சாயீ ராக்ஷித், சுமேஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

 

Exit mobile version