தே.மு.தி.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில், இழுபறி என்ற பேச்சிற்கே இடமில்லை என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றும், தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்த முழுவடிவம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version