டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துக் கொள்கிறார்.

காலை 11 மணிக்கு நடைபெறும் மணிமண்டப திறப்பு விழாவில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.

பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்துக் கொள்கின்றனர்.

Exit mobile version