ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே..அதிமுக பொதுக்குழுத் தீர்மானங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது..!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டத் தீர்மானங்கள் அனைத்தையும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவானது பொதுச்செயலாளர் மற்றும் கட்சிக்கு ஒரு தலைமைத் தேவை, துரோகம் செய்தவர்கள் வெளியேற்றம் போன்ற முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது. இத்தீர்மானத்திற்கு எதிர்த்தரப்பு தொடர்ந்து வழக்குத் தொடுத்து வந்தது. அனைத்து வழக்குகளையும் முறியடித்து பொதுக்குழுச் செல்லும் என்று மேல்முறையீடு தீர்ப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது பொதுக்குழுத் தீர்மானங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இனி யாராலும் எந்த நிலையிலும் ஒற்றைத் தலைமை என்கிற தன்மைக்கு எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Exit mobile version