ப. சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு எதிரான கருப்பு பண தடுப்பு சட்ட வழக்கு ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு எதிரான கருப்பு பண தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கியதாக குற்றம்சாட்டு எழுந்தது. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.விசாரணைக்கு ஆஜராக சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூவருக்கும் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தங்களை விடுவிக்கக் கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு மூவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கருப்புப் பண தடுப்பு சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை வழக்கு தொடர எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறு என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Exit mobile version