வறண்ட நீர்தொட்டிக்குள் 10 மணிநேரமாக சிக்கி தவித்த கரடிகுட்டிகள்

உதகை அருகே பொக்காபுரம் பகுதியில் வறண்ட தண்ணீர் தொட்டிக்குள் 10 மணி நேரமாக சிக்கி தவித்த 3 கரடி குட்டிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

உதகை அருகே உள்ள சிங்காரா வனப் பகுதியில் நீர்நிலைகள் வற்றி உள்ளதால் வனவிலங்குகளுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பொக்காபுரத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரிய தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்த 3 கரடிக்குட்டிகள் தொட்டிக்குள் இறங்கி உள்ளன. ஆனால் தண்ணீர் இல்லாததால் கரடிகள் தொட்டியை விட்டு வெளியில் வரமுடியாமால் 10 மணி நேரமாக சிக்கித் தவித்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தொட்டிக்குள் இருந்த கரடிகள் பத்திரமாக மீட்டனர்.

Exit mobile version