அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில்அதிமுக வெற்றிப்பெறும்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேடபாளராக செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எனவும், அரவக்குறிச்சி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் என்றும் கூறினார்.

Exit mobile version