இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆவடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு 46 லட்சம் மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி கல்விதுறை சார்பாக நடைப்பெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர், ஆர்.சி. தீனதயாளன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், அதிமுக அசைக்கமுடியாத கோட்டை என்று கூறினார். அரவகுறிச்சி தொகுதியில் மட்டுமில்லாமல், 20 தொகுதிகளிலும் மிகப்பெரிய அதிமுக வெற்றியை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post