விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற் பயிற்சி மையத்தினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை பாஜக வெற்றி படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் அதிமுகதான் வலுவான கட்சி எனவும், மக்களுக்கான ஆட்சியை சிறப்பாக வழங்கி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டப் பேரவை தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post