சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை

செங்குன்றத்தில் திருவள்ளூர் மக்களவை தொகுதி அதிமுகவேட்பாளர் டாக்டர்.வேணுகோபாலை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு கூடியிருந்த திரளான மக்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறம் மாறும் குணம் கொண்ட பச்சோந்தியாக இருக்கும் நிலையில் அவரை நம்பி காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது சரிதானா என்று கேள்வி எழுப்பினார். செங்குன்றம் பகுதியில் தமிழக அரசு செய்த நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டார். சென்னை குடிநீர் தேவையை போக்க நடவடிக்கை எடுப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

Exit mobile version