சென்னை வில்லிவாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து

சென்னை வில்லிவாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், ஒரு பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சரசு என்ற பெண் பலியானார். படுகாயமடைந்த மோகன் என்பவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு பெண்ணான ஆதி லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய காரிலிருந்து இருவர் தப்பியோடிய நிலையில், மது போதையில் காரை ஓட்டிய தேவேந்திரனை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version