முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  நேரில் சந்தித்து செவிலியர்கள் நன்றி

அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து அவர்களின் ஊதியத்தை 14 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், சென்னை தலைமைசெயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த செவிலியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version