மக்களவை துணை சபாநாயகராக தேர்வு செய்ததற்காக நன்றி

மக்களவையின் கடைசி நாளில் அவையில் பேசிய தம்பிதுரை, தன்னை துணை சபாநாயகராக தேர்வு செய்ததற்காக நன்றி தெரிவித்துகொண்டார்.

16-வது மக்களவை கூட்டத்தொடரின் கடைசி அலுவல் தினத்தில் பேசிய துணை சபாநாயகர் தம்பிதுரை, 1984 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பெரும்பான்மையோடு ஆட்சியமைத்தபோது தான் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் 30 ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பெரும்பான்மையோடி ஆட்சியமைத்தபோது மீண்டும் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், தன்னை மக்களவைத் துணை சபாநாயகராக தேர்வு செய்ததற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version