காவிரியில் அணை கட்டுவதற்கு சரியான இடம் ஒக்கேனக்கல் – தம்பிதுரை

கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு சரியான இடம் ஒக்கேனக்கல் தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணைக் கட்டுவதற்கு கர்நாடக
அரசுக்கு உரிமை கிடையாது என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காக கர்நாடக அரசு சதித்திட்டம் தீட்டுவதாகவும், அதற்கு காங்கிரஸ் அரசு உடந்தையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version