தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் காவடி எடுத்து சாமி தரிசனம்!

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து வருகின்றனர். தைப்பூச திருவிழாவையொட்டி, இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும், 7.30 மணிக்கு தங்கத்தேரிலும், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.YouTube video player

Exit mobile version