தஹில் ரமானி அமர்வுக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் 2 வது அமர்வுக்கு மாற்றம்

தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்ததை அடுத்து, அவர் அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகள் 2 வது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலயா உயர்நீதி மன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணியிடமாற்றத்தை மறு பரிசீலனை செய்ய தஹில் ரமானி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தஹில் ரமானி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இருப்பினும், ராஜினாமா தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் குடியரசு தலைவரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையில், தஹில் ரமானிக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் 2வது அமர்வான துரைசாமி அமர்வில்75 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version