பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமர்நாத் புனித யாத்திரை தொடங்க உள்ள நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், பட்காம் மாவட்டம் சாதூரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பதுங்கி உள்ள மற்ற தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version