சச்சினுக்கு மிக உயரிய கவுரவத்தை வழங்கிய ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மட்டுமல்லாமல் கேப்டனாகவும் பணியாற்றியவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக 6 உலக கோப்பையில் விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இதுவரை நீடித்து வருகிறார். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் நூறு சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இவரது சாதனைப் பட்டியலை எடுத்துக் கொண்டால் அடுக்கிக் கொண்ட போகலாம். மேலும், எல்லா கால சம வீரர்களும், மதித்து வரும் வீரராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் பிரபலம் அடைவதற்கு சிறப்பாக பணியாற்றியதாக சச்சின் டெண்டுல்கருக்கு, “ஹால் ஆஃப் ஃபேம்” என்ற ஒரு சிறப்பு பெருமையை அளித்துள்ளது. ஏற்கனவே, பிஷன் சிங் பேடி, கவாஸ்கர், கபில் தேவ், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோர் இந்த பெருமையை பெற்றுள்ளனர். தற்போது, சச்சின் டெண்டுல்கர் 6-வது வீரராக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Exit mobile version