உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலையில் 10 பெண்கள் சாமி தரிசனம் – கேரளா போலீஸ்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க. தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதனால் சபரிமலையை சுற்றியுள்ள இடங்களில் 144 தடையுத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு கேரளாவில் போராட்டங்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து அங்கு இதுவரை 10 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு செயல்படுத்தப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Exit mobile version