மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா கோலாகலம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா கோலாகல தொடங்கி உள்ளது.

ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை பக்தர்கள் ஏராளமானோர் மனமுருக தரிசனம் செய்தனர். ஆனி ஊஞ்சல் உற்சவ விழா வரும் 16 ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் சாயரட்சை பூஜைக்குபின் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு ஊஞ்சல் கொண்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன் மாணிக்கவாசகர் அருளிய திருப்பொன்னாஞ்சல் ஓதப்பட்டதை தொடர்ந்து மஹா தீபாரானை காட்டப்பட்டது. பின்பு சுவாமியும் அம்மனும் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி பிரகாரங்ததை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

Exit mobile version