டான்செட் நுழைவுத் தேர்வு: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை இன்றுடன் முடிவு

முதுநிலை பொறியாளர் படிப்புகள் சேர நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை இன்றுடன் முடிவடைகிறது.

டான்செட் தேர்வுக்கு இதுவரை 31 ஆயிரத்து 387 பேர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. எம்.பி.ஏ நுழைவுத் தேர்வு ஜூன் 22ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4 .30 மணி வரை நடைபெற உள்ளது. எம்.சி.ஏ நுழைவுத் தேர்வு ஜூன் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version