தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 12 ஆம் தேதி திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகளானது ஜூன் 7 ஆம் தேதி திறக்கும் எந்றூ சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெயிலின் தாக்கமானது அதிக அளவிற்கு உள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழ்நாட்டின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் பள்ளிகள் விரைவில் திறக்கப்படுவதாக ஒரு அறிவிப்பு முன்னர் வந்தது. அதாவது ஜூன் 1 ஆம் தேதி திறக்கும் என்று பள்ளிக்கல்வித்துறையானது அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. பின்னர், ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று தேதியினை மாற்றி அமைத்தது. தற்போது ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அதிகாரப் பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் 12ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளப் பள்ளிகள் 14 ஆம் தேதியும் திறக்கப்ப்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version