News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

முதியவர் மீது மிளகாய்ப்பொடி தூவி வைரமோதிரத்தை கொள்ளையடித்த கும்பல்!

Web Team by Web Team
September 17, 2020
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
முதியவர் மீது மிளகாய்ப்பொடி தூவி வைரமோதிரத்தை கொள்ளையடித்த கும்பல்!
Share on FacebookShare on Twitter

மிளகாய் பொடியை தூவி, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர், தன் தாத்தாவின் 59.6 கிராம் வைர மோதிரத்தை விற்பனை செய்ய, சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 13-ஆம் தேதி மாலை, திண்டிவனம் அருகிலுள்ள கூட்டேரிப்பட்டி என்ற இடத்தில், கருணாநிதியும் அவரது நண்பரும் இடைதரகர்களுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு காரில் வந்த இடைத்தரகர்கள், மோதிரத்தை பரிசோதிக்க வேண்டும் என்று கூறி கருணாநிதியை அழைத்துச் சென்றனர். ஆனால், கருணாநிதி எதிர்பார்க்காத நேரத்தில், அவர் மீது மிளகாய் பொடியை தூவினர். எதிர்பாராத மிளகாய்ப்பொடி தாக்குதலால் நிலைகுலைந்த கருணாநிதியிடமிருந்து, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரத்தை கொள்ளையடித்ததோடு, கருணாநிதியின் நண்பர் பிரகலாதன் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் 2 பவுன் மோதிரத்தையும் பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து மயிலம் காவல்நிலையத்தில் கருணாநிதி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இடைத்தரகர்களான சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த அருள்முருகன், வடபழனியை சேர்ந்த செந்தில் ஆகிய இருவரிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில், குற்றவாளிகள் இருக்கும் இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர்.

அதன்படி, விழுப்புரத்தை சேர்ந்த பரந்தாமன், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மகேஷ், விஜய்சேகர் மற்றும் பிரசாந்த் ஆகிய 5 பேரையும், தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து மூன்று மோதிரங்களை பறிமுதல் செய்தனர். அவற்றில் ஒரு மோதிரம் மட்டுமே அசலானது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காணாமல் போன மோதிரங்கள் குறித்தும், இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: குற்ற சம்பவம்க்ரைம் செய்திக்ரைம் டைரிதிண்டிவனம்வைரமோதிரம்
Previous Post

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45,000 குழந்தைகள் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Next Post

பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்துவந்த பாதை!

Related Posts

ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை – 5 பேர் கைது
தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப் படுகொலை – 5 பேர் கைது

October 7, 2020
பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்
தமிழ்நாடு

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

October 7, 2020
குழந்தைத் திருமணத்திற்கு உடந்தை – கம்பி எண்ணும் குடும்பம்
தமிழ்நாடு

குழந்தைத் திருமணத்திற்கு உடந்தை – கம்பி எண்ணும் குடும்பம்

October 7, 2020
கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்
இந்தியா

கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்

October 6, 2020
பணத்துக்காக முதியவர் கொலை; பிடிபட்ட இளைஞர்கள்!
TopNews

பணத்துக்காக முதியவர் கொலை; பிடிபட்ட இளைஞர்கள்!

October 3, 2020
காரை ஓட்ட கொடுக்காததால் ஆத்திரம் –  காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்
தமிழ்நாடு

காரை ஓட்ட கொடுக்காததால் ஆத்திரம் – காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்

October 1, 2020
Next Post
பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்துவந்த பாதை!

பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்துவந்த பாதை!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version