முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படையும் தங்களுக்கு ஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என கடலூர் சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கிற்குப் பிறகு, நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் அறிவிப்பால் தங்களுடையை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறியுள்ள சிறு குறு வியாபாரிகள், பகுதி நேர கடைகள் செயல்பட அனுமதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
முழு ஊரடங்கு காலத்தில் தினசரி வருமானத்திற்கு வழியில்லாததால் கடன் தவணை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் தங்களுக்கு, நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்
Discussion about this post