அரசு பங்களாவை காலி செய்வதாக சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமைச்சராக இருந்த போது தனக்கு ஒதுக்கிய அரசு பங்களாவை காலி செய்வதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே அதில் தலையிட்டு தீர்ப்பதிலும், அவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வருவதிலும் கட்சி வேறுபாடின்றி அனைவரின் பாராட்டை பெற்றவர் சுஷ்மா சுவராஜ். உடல் நிலை குறைவு காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் அமைச்சராக இருந்த போது தனக்கு ஒதுக்கிய அரசு பங்களாவை காலி செய்ய உள்ளதாக டுவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அந்த முகவரில் தன்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் சுஷ்மா கேட்டு கொண்டுள்ளார்.

அதே நேரத்தில், எம்.பி.யாக இல்லை என்றாலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை போன்று பாதுகாப்பு வழங்கப்படுவோர் பட்டியலில் அவரது பெயரை சேர்த்து அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version