குஜராத்தில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில் பெய்த கனமழையில் இளம்பெண் ஒருவர் மின் கம்பத்தை பிடித்து சாலையை கடக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூரத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், மழையில் நனைந்தபடி இளம்பெண் ஒருவர் சாலையை கடக்க மின்கம்பத்தை பிடித்து சென்றார். அப்போது அந்த பெண்ணின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

Exit mobile version