குஜராத்திற்கு ரெட் அலர்ட்; வாயு புயல் நாளை கரையை கடக்கிறது

குஜராத்தின் போர்பந்தர் அருகே வாயு புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் கடல் பகுதிகளில் அதிகளவில் கடற்சீற்றம் காணப்படுகிறது. அங்கு இருதினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் 3 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களில் மாநில அரசு தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த ஆறு குழுக்கள் குஜராத்திற்கு விரைந்துள்ளன.

Exit mobile version