சென்னையில் முக்கிய சாலையில் திடீரென விழுந்த பள்ளம்

சென்னையில் முக்கிய சாலையில் திடீரென பள்ளம் உருவானதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

மத்திய கைலாஷ் பேருந்து நிலையம் சிக்னல் அருகே நேற்று மாலை திடீரென பள்ளம் விழுந்தது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள், அதிர்ச்சியில் வாகனங்களை ஆங்காங்கே சாலையில் நிறுத்தினர். இதையடுத்து போக்குவரத்து காவலர்கள் உடனடியாக விரைந்து வந்து, பள்ளம் ஏற்பட்டுள்ள சாலையைச் சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்தனர். தகவலின் பேரில், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

Exit mobile version