தமிழக கர்நாடக எல்லையில் வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியல்

தமிழக கர்நாடக எல்லைப்பகுதிகளான ஆசனூர், காரப்பள்ளம் சோதனைச்சாவடி மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியில் கடந்த சில மாதங்களாக அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் காலை 6 மணி முதலே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் காலையிலேயே மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்படுவதாக கூறி வாகன ஓட்டிகள் சுமார் 60 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version