சென்னையில் தனியார் உணவு விடுதியில் திடீர் தீ விபத்து

குறைந்த மின் அழுத்தம் காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது

ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். குறைந்த மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து நேர்ந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். தீ விபத்தின் போது ஏற்பட்ட கரும்புகையால் அறையில் இருந்த உணவுப் பொருட்கள் பாழாகின.

Exit mobile version