சோளிங்கர் அருகே ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்

வேலூர் மாவட்டம் சோளிங்கர், மகேந்திரவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றனர்.

தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்த ரயில்வே ஊழியர், சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஜோலார்பேட்டை விரைவு ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. இதேபோல், திருவனந்தபுரம் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ததை தொடர்ந்து ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன.

Exit mobile version