வாரிசு அமைச்சரின் வசூல் வேட்டை ! ஆளுநர் அதிர்ச்சி – சவுக்கு சங்கர்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் தொடர்பாக இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்த அவர், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி துணிவு, வாரிசு திரைப்படங்களை நள்ளிரவில் திரையிட்ட விவகாரம் குறித்து ஆளுநரிடம் விளக்கி கூறியுள்ளதாகவும், வாரிசு அமைச்சரின் வசூல் வேட்டை குறித்து ஆளுநர் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநருக்கு சட்ட விதிகள் அனைத்தும் நன்றாக தெரியும் என்பதால் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக கூறினார்.

Exit mobile version