தஞ்சை பெரிய கோயிலில் மாணவ, மாணவிகள் யோகாசன பயிற்சி

உலக யோகா தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் யோகாசன பயிற்சி செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் இந்திய சுற்றலாத்துறை சார்பில் பல்வேறு தரப்பினரும் யோகாசன பயிற்சி செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் யோகாசன பயிற்சி நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதன்மூலம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Exit mobile version