பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து யோகாசனங்களை செய்து அசத்திய நாய்கள்

காஷ்மீரில், எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து நாய்கள் யோகாசனங்கள் செய்தது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘இதய ஆரோக்கியத்துக்காக யோகா’ என்ற கருத்தை மையமாக கொண்டு சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் அன்றை தினத்தில் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூளையிலும் ஏராளமானோர், யோகா பயிற்சியில் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில், எல்லை பாதுகாப்பு படையில் ஈடுபட்டுள்ள வீரர்கள் இன்று யோகா பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது, இவர்களுடன் பயிற்சி பெற்ற நாய்களும், வீரர்கள் செய்யும் யோகாசனங்களை பார்த்து, பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version