மாநகரப்பேருந்தின் பக்கவாட்டில் ஏறி பயணம் செய்த மாணவர்கள்

சென்னையில் மாநகரப் பேருந்தில் கலாட்டாவில் ஈடுபட்ட  இரண்டு கல்லூரி மாணவர்களை  காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிராட்வே வழியாக வந்த மாநகரப் பேருந்தில் ஏறிய இரண்டு இளைஞர்கள் பேருந்தின் பக்கவாட்டில் ஏறிக்கொண்டு கூச்சலிட்டபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அந்த இளைஞர்கள் குறித்து  திருவல்லிகேணி காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் புதுக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.  இதனையடுத்து அந்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version