சென்னையில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி : 400 வீரர்கள் பங்கேற்பு

சென்னையில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடையாறில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி இன்று தொடங்கியது. 400 வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி இன்று நாளையும் நடைபெறுகிறது.

ஜுனியர் , சப் ஜீனியர் , சீனியர் , மாஸ்டர் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர்கள் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்பார்கள் என தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் அருள்மணி தெரிவித்தார்.

Exit mobile version