ஜனவரி முதல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம் செய்த எஸ்பிஐ

வரும் ஜனவரி மாதம் முதல், ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது, பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் கடவுச் எண்ணை பயன்படுத்தி தான் பணம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம் மூலம் நடக்கும் பண மோசடிகளை தடுக்கும் பொருட்டு இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஏ.டி.எம்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது இந்த வழிமுறையை ஸ்டேட் வங்கி பயன்படுத்தப்பட உள்ளது.

Exit mobile version