News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அரசுக்கு ஒத்துழைக்காமல் மக்களை பயமுறுத்துகிறார் ஸ்டாலின்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Web Team by Web Team
June 17, 2019
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
அரசுக்கு ஒத்துழைக்காமல் மக்களை பயமுறுத்துகிறார் ஸ்டாலின்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Share on FacebookShare on Twitter

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் குழு அனுப்பி வைக்கப்பட்டு, வறட்சி பாதித்த பகுதிகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு தமிழக அரசு குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில் குடிநீர் தேவையை தெரிந்து கொள்ளாமல் சென்னை நகருக்கு மட்டும் 7 ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எந்தவொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்கமும் பாதிக்கப்படவில்லை என்றும் தனியார் உணவகங்கள், மென்பொருள் நிறுவனங்கள் தடையின்றி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 7 ஆயிரத்து 250 கோடியே 12 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சியில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக 21 ஆயிரத்து 988 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த மூன்றாண்டு ஆட்சியில், 15 ஆயிரத்து 838 கோடி ரூபாயில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, கடும் வறட்சியிலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து, தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 300 மில்லியன் லிட்டர் குடிநீர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும், திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதைவிட இது இரண்டாயிரத்து 400 மில்லியன் லிட்டர் கூடுதல் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். சென்னையில் தினந்தோறும் 900 லாரிகள் மூலம் 9 ஆயிரத்து 100 நடைகளில் மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டு வறட்சி பாதித்த பகுதிகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மழைப்பொழிவின்றி கடுமையான வறட்சியினால், சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவது குறித்து அறிந்திருந்தும், இந்த நேரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பை வழங்காமல், மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் செயல்படுவது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Tags: எடப்பாடி பழனிசாமிதமிழக அரசுதிமுகமு.க.ஸ்டாலின்
Previous Post

குடிநீர் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளது: எஸ்.பி.வேலுமணி

Next Post

நீர் பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: தமிழிசை கண்டனம்

Related Posts

அமைச்சரா இருந்தா கொலை மிரட்டல் விடுக்கலாமா?
TopNews

அமைச்சரா இருந்தா கொலை மிரட்டல் விடுக்கலாமா?

August 3, 2021
டிக்கெட் எடுக்க சொன்னதற்கு தாக்குதல்: ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
TopNews

டிக்கெட் எடுக்க சொன்னதற்கு தாக்குதல்: ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

August 3, 2021
கருணாநிதி படத்திறப்பு என்னும் ஆடம்பரச் செலவு?
TopNews

கருணாநிதி படத்திறப்பு என்னும் ஆடம்பரச் செலவு?

August 2, 2021
அம்மா உணவகத்தில் நிலவும் பரபரப்பு வீடியோ…
Top10

அம்மா உணவகத்தில் நிலவும் பரபரப்பு வீடியோ…

July 27, 2021
லாபத்துக்காக பல்கலை.யை மூடும் திமுக…   முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்
TopNews

லாபத்துக்காக பல்கலை.யை மூடும் திமுக… முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்

July 26, 2021
பொறுப்பின்றி செயல்படும் TANGEDCO… அரசு செய்ய வேண்டியது என்ன?
TopNews

பொறுப்பின்றி செயல்படும் TANGEDCO… அரசு செய்ய வேண்டியது என்ன?

July 23, 2021
Next Post
நீர் பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: தமிழிசை கண்டனம்

நீர் பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: தமிழிசை கண்டனம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version