கிராம சபைக் கூட்டம்: வேண்டுமென்றே அரசியல் செய்கிறார் ஸ்டாலின் – கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

மக்கள் நலன் கருதியே கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ஸ்டாலின், வேண்டுமென்றே அரசியல் செய்வதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் நினைவுநாளையொட்டி, தியாகராய நகரில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமராஜர் இல்லத்தை சீரமைக்க செய்தித்துறை சார்பில் ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கிராம சபைக் கூட்டங்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க முடியாது என்பதற்காகவே கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் ஸ்டாலின் வேண்டுமென்றே அரசியல் செய்வதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

Exit mobile version