“பொய்யை முதலீடு செய்து ஆட்சியை பிடித்தவர் ஸ்டாலின்” – கே.சி.வீரமணி விமர்சனம்

பொய்யை முதலீடு செய்து திமுக ஆட்சியைப் பிடித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விமர்சித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்கு அதிமுக ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி, வாணியம்பாடி எம்.எல்.ஏ, செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் புஷ்பநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆலோசனை வழங்கி பேசிய கே.சி.வீரமணி, திமுகவினர் பொய்யை முதலீடு செய்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளதாக சாடினார்.

300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்துள்ள திமுக, என்ன செய்யப் போகிறது என்பதை மக்கள் பார்த்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற நிர்வாகிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version