காந்தியின் ஆளுமை உலகம் முழுவதும் கௌரவத்தை பெற்றுள்ளது – இலங்கை அதிபர் சிறிசேன

மகாத்மா காந்தியின் ஆளுமை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கௌரவத்தை பெற்றுள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அதிபர் சிறிசேனா மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டினார்.

புதியதோர் உலகிற்காக, புதியதோர் பயணத்தை மேற்கொள்வதற்கு மகாத்மா காந்தியின் ஆளுமையை கற்று, அதனை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

மகாத்மா காந்தியின் ஆளுமையை வாசிப்பதன் மூலம் உலக அளவில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கூறினார். 

Exit mobile version