தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் நல்ல நட்புறவில் உள்ளனர் – இலங்கை அமைச்சர் சுவாமிநாதன்

தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் நல்ல நட்புறவில் உள்ளதாக இலங்கை அமைச்சர் சுவாமிநாதன் கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டரை வருடமாக மீனவர்கள் விவகாரம் நடந்து கொண்டு இருப்பதாகவும், தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் நல்ல நண்பர்களாக உள்ளதாகவும், அதனை தாங்கள் நிறுத்த முடியாது எனவும் கூறினார்.

விடுதலை புலிகளுடனான போரின் போது, வீடுகளை இழந்த தமிழர்களுக்கு 80% வீடுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 20% வீடுகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் சபரிமலை கோவிலுக்கு பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது சரியானது இல்லை என்றும் இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Exit mobile version