பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கைவாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் மன்னார் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போரில் மாயமானவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைப் போரில் மாயமானவர்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இலங்கைவாழ் தமிழர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போரில் மாயமானவர்களின் குடும்பங்களின் சார்பில் மன்னாரில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன. மன்னார் அரசு பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நடைபெறும் பகுதிகள் வழியாக மன்னார் மாவட்ட செயலகத்தில் நிறைவுற்றது.

இதையடுத்து மாவட்ட செயலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐ.நா. கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் இந்த சூழலில், இலங்கைப்போர் குறித்த சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version