இலங்கை காவல்துறைத் தலைவர் பூஜித் ஜெயசுந்தர் பதவி விலகல்

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்நாட்டு காவல்துறைத் தலைவர் பதவி விலகியுள்ளார்.

இலங்கை குண்டு வெடிப்பு விவகாரத்தினால் அதிருப்தியடைந்துள்ள, அந்த நாட்டு அதிபர் சிறிசேனா, நாட்டின் இரு மிக முக்கிய அதிகாரிகளை பதவி விலக உத்தரவிட்டார். பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ நேற்று பதவி விலகிய நிலையில், காவல்துறை தலைவர் பூஜித் ஜெயசுந்தர் பதவியில் இருந்து விலகியுள்ளார். குண்டு வெடிப்புகள் குறித்து உளவுத்துறை முன்கூட்டியே தகவல் அளித்தும், அதிபர் மற்றும் பிரதமருக்கு, அந்த தகவலை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், இருவரும் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version