இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: இலங்கை கடற்படை மறுப்பு

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக வெளியான தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் 15 பேர் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை கடற்படையின் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார, இந்த தகவல் தவறானது என்று குறிப்பிட்டார். அனைத்து கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுவரை அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

Exit mobile version