இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை வழிமறித்த இலங்கைக் கடற்படையினர், விசைப்படகு மற்றும் மீன்பிடி கருவிகளைச் சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்து விட்டுக் கரை திரும்பிய அவர்களை வழிமறித்த இலங்கைக் கடற்படையினர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு, விசைப்படகுகளில் இருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி கருவிகளைச் சேதப்படுத்தினர். கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்க வரக் கூடாது என இலங்கைக் கடற்படையினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால், படகு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வரும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்திற்கு, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version