புத்தாண்டையொட்டி தமிழக மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் 8 பேர், கச்சத்தீவு அருகே நாட்டு படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவர்கள் 8 பேரையும் கைது செய்தது. பின்னர், குத்தலம் நீதிமன்றத்தில் மீனவர்களை இலங்கை கடற்படை ஆஜர்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், 8 பேரையும் விடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.

ஆனால், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள இலங்களை தூதரகத்தில், மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுவித்தனர். இதனை ஏற்று, மீனவர்கள் 8 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

Exit mobile version