இலங்கையின் வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதி: பிரதமர் மோடி

இலங்கையின் வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்

3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தினார். இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடைபெற்றது. அதன்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதச் செயல்களை இந்தியா எப்போதும் கண்டித்து வருவதுடன், அதற்கு எதிராகப் போராடியும் வருவதாக குறிப்பிட்டார். மேலும் இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக 450 கோடி அமெரிக்கன் டாலர் நிதியதவி வழங்கப்படுவதாக தெரிவித்தார். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக மேலும் 14 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் 13ஆவது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Exit mobile version